யாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் நாகம்மா அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று ஈவினையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாவற்குழியைச் சேர்ந்த தம்பித்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
நாகேஸ்வரன்(கனடா), முருகையா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தேவாரணி, சோதிலட்சுமி ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
பவளகேசன், சத்தியவதி, ஹரிகரன், நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மனோன்மணி, காலஞ்சென்ற லோகநாதன் மற்றும் கருணாவதி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு சகலியும்,
பிரதீபா- ராஜானந்த், ஜனாதீபா- அரவிந்த், பிரசாத், ஜினிதா- அமுதாகரன், சாலினி- லோஜானந்த், பாலமுரளி- சூஷான் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
ஆரணி, ஆர்த்தி, அபிராமி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
மைரா, றியா, ஸ்ருதி, ஐரன், ஆரவி, ஐலா, ஆதி, றய்லன், சக்தி, சேரா ஆகியோரின் பாசமிகு அத்தைபாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஈவினை விலங்கன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My thoughts and prayers are with you, Murugiah, during this time of grief. May the Lord comfort your heart. May her soul rest in peace.