உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, கந்தர்மடம், கோண்டாவில், நாயன்மார்கட்டு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பவானியம்மா குழந்தைவேலு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-01-2023
ஈரைந்து மாதங்கள் எமை சுமந்து மீட்டெடுத்தாய் பரிவோடு பாராட்டி சீராட்டி வளர்த்தெடுத்த எம் தாயே.! உங்களை இனி எங்கே காண்போம் அம்மா..!
இல்லறமே நல்லறம் என உரைத்து இரு கரம் பற்றி, சீரும் சிறப்புமாய் மழலை செல்வங்களோடு மண்ணுலகத்தில், மாண்புடன் வாழ வழிசமைத்து வாழ்வாங்கு வாழவைத்தாயே.!
உன்னை இனி எங்கு காண்போம், அம்மா அம்மா என கதறுகிண்றோம் ஆயிரம் உறவிருந்தாலும் அம்மாவின் உறவுபோல் இனிவருமோ?
ஏங்குகின்றோம் ஏதினில் இனி எமக்கு ஏற்றம் புரிய வைக்க யார் வருவார்.! யார் வருவார்.! உன் பிரிவால் வாடும்...