2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மரியதாஸ் பஸ்ரியாம்பிள்ளை
1940 -
2020
குருநகர், Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியதாஸ் பஸ்ரியாம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
பிறந்த மண்ணிலிருந்து
நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
சிப்பிக்குள் ஒரு முத்தென
அன்பு அமுதூட்டிக் கண்ணின்
இமை போலக் காத்து
வளர்த்த எங்கள் செல்ல அப்பா
ஓடி வாருங்கள்!!
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்