மரண அறிவித்தல்

Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சிவகுமார் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், ராஜேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம் செல்வராணி(அச்சுவேலி தோப்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதிமதி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
அஜித், ரஞ்ஜித், சதுர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஸ்(பிரான்ஸ்), சுமணா(பிரான்ஸ்), பாலசுதர்சன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார்(சுவிஸ்), கோமதி(அச்சுவேலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் பிரான்ஸில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ராஜ்குமார்(விஜி)