யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நாகேஸ்வரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் பத்து
ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது
அம்மாவின் அன்பைத் தந்து,
அரவணைப்பில் தாயாகி,
அப்பாவின் பாசத்தை நினைவூட்டி,
அன்பில் என்றும் துணையாகி...
சின்னச் சின்ன சண்டைகளிலும்,
சிரிக்க வைக்கும் வார்த்தைகளிலும்,
என் கவலை மறக்கச் செய்யும்
அழகான உறவு — என் அத்தை!
தூரத்தில் இருந்தாலும்
இதயத்திற்கு
அருகில் இருப்பவர்,
உறவு என்ற சொல்லுக்கு
உண்மையான அர்த்தம் தருபவர்...
வாழ்க்கை முழுவதும்
உங்கள் பாசம் தொடரட்டும்,
என் நினைவுகள் அனைத்திலும்
என் அத்தையின் அன்பு நிலைத்திருக்கட்டும்! ❤️
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!