யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசெளந்தரி பூபாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
10 ஆண்டுகள் கடந்ததம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்...
காலம் கடந்து காலனவன்
எமை அழைக்கும்வரை
கண்ணீரோடு காத்திருப்போம்
உனைக் காணும் வரை
உங்கள் நினைவு சுமந்த வலிகளைத் தாங்கி
வழிகளைத் தேடித் தொடரும்
இந்த சுகமான வாழ்க்கைப் பயணத்தில்
எமக்கு வழிகாட்டி வல்லமை
தாரும் எங்கள் தாயே!
அன்னையாய் எமை சுமந்து
அரணமைத்து பாதுகாத்தாய்
அகம் நிறைந்து நாம் வாழ
மன மகிழ்ந்து பூரித்தாய்!
நாங்கள் கதைக்கும் போது
கேட்டு சிரிப்பாயம்மா
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
நீங்கள் இல்லையம்மா
ஆறுதல் இன்றும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் அம்மா!
வாழ்ந்திடும் காலமெல்லாம்
இனி உங்கள் துயரந்தான்
வழிந்தோடும் கண்ணீரை
உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்
எங்கள் உள்ளத்தில் கருணையுள்ள
கடவுளாய் வாழ்வீர்கள்...
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!