யாழ். காரைநகர் வலந்தலை கணக்கானார் கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலரஞ்சினி விக்னேஷ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நீங்காத நினைவு தந்து- நீ
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம்
தானா - என்று
நினைக்கும்
முன்னே நீ
மறைந்தது ஏனோ?
விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான்
இல்லையன்றோ
கண்ட பல கனவிலும்
வந்து வந்து போகுதடா
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு
முகம் தேயாதடா!
உதிர்ந்து நீ போனாலும் உருக்கும்
உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில்
என்றென்றும் உறைந்திருக்கும்
உன் பிரிவினால்
வாடும்
குடும்பத்தினர்..!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல், Harrow Leisure Centre ( Mesefield Suite), Christchurch Ave, Harrow, HA3 5BD எனும் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இத்த௫ணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வ௫கை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Ranji, I miss you more than words can hold, but I’m grateful for every moment we had. You are one of the best human & best friend among our friends in our batch at Jaffna university. My heartfelt...