Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 28 SEP 1942
மறைவு 05 DEC 2023
திருமதி பாலதேவி சின்னையா
BSC (Hons) Madrass University- India, ஓய்வுபெற்ற ஆசிரியை- மட்டுவில் தெற்கு அமெரிக்கன் தமிழ்க்கலவன் பாடசாலை , சாவகச்சேரி
வயது 81
திருமதி பாலதேவி சின்னையா 1942 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலதேவி சின்னையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம் வாழ்க்கையின்
வேராய் வாழ்ந்தவள் நீங்கள்
வாழ்க்கையில் ஒப்பிடா
வேராய் விளங்குபவர் நீங்கள்
உடலுக்குள் உயிர்
வளர்த்த கடவுள் நீங்கள்
பத்துத்திங்கள் எம் சுமைதூக்கிய
சுமைதாங்கியும் நீங்களம்மா!

ஆயிரம் ஆண்டுகள்
அடுத்தடுத்து வந்தாலும்
ஆழிசூழ் உலகில் அன்னை
உன் நினைவு மங்கிடுமோ?
நீ தந்த பாசத்தை இவ்வுலகில்
எமக்கினி யார் தருவார்?

அருமருந்தாய் இருந்து
அல்லல் என்ற நோய் தீர்த்து
அன்பென்னும் பாசத்தை
அமுதுடன் கலந்தளித்து
அகிலத்தில் நாம் வாழ
ஆக்கமும் ஊக்கமும் தந்த
ஆற்றலே! தாயே! அன்னையே!!

அருகில் நீங்கள் இல்லை அம்மா- ஆனால்
எம் அனைவரையும் அணைத்தே
இருக்கின்றீர்கள் அம்மா!
காலன் எங்கள் உறவுப்பாலத்தை
அறுத்து- உயிர்மூச்சை
பறித்து ஒரு மாதம் ஆனாலும்
ஆறவில்லை எம் துயரம்... 

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்... 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.