1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பாலச்சந்திரன் மேரி ராணி
1947 -
2022
முல்லைத்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலச்சந்திரன் மேரி ராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை
பிரிவின் துயரம்
நீங்கள்
இல்லா உலகமதில்
வாசல்
இலா வீடானோம்- தாயே!
இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல்
யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!
பிரிவால் துயருறும்
மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்