
யாழ். சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அற்புதராணி கந்தசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-02-2023(அமாவாசை)
எமது குடும்பத்தின் தலைவியே !
பாசமுள்ள அம்மாவே !
நீங்கள் எங்களை விட்டு இறைவனடிசேர்ந்து
ஓராண்டுகள் ஆகிவிட்டதோ !
அப்பா இல்லாத இடத்தில் 30 ஆண்டுகள் அரணாக இருந்து
எங்கள் அனைவரையும் கரை சேர்த்து வைத்தீர்களே !
எங்களுக்காக ஆண்டவனை நினைத்து நினைத்து
விரதங்களும் பூசைகளும் தொண்டுகளும்
செய்தீர்களே !
ஆலயம் செல்வது தவிர வேறு எங்கும் நீங்கள்
போனதில்லையே அம்மா !
இத்தியடிபிள்ளையாரும் மீனாட்சி அம்மனும் கூட
உங்களை கைவிட்டு விட்டார்களே !
கடவுளின் கழுத்தில் நீங்கள் கட்டும்
பூமாலைகள் இல்லையே அம்மா !
எதுவித சந்தோசங்களையும் அனுபவிக்காமல்
குடும்பத்திற்காக உங்களை அர்ப்பணித்தீர்களே !
உங்களது மரணம் இன்று வரை விடை
தெரியாத கேள்வியாகவே உள்ளது.
ஆறாத துயரத்துடன் உங்களது
நினைவுகளுடன் வாழும் குடும்பத்தினர்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஒம் சாந்தி