25ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருந்தவமலர் வர்ணகுலசிங்கம்
1960 -
1994
கட்டுவன், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருந்தவமலர் வர்ணகுலசிங்கம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எனும் உயர்ந்த உறவை நாம் இழந்து
இன்றுடன் ஆண்டுகள் இருபத்தைந்து பறந்தோடிச் சென்றாலும்
அமுதூட்டி அரவணைத்த அன்புத் தாய் எனும்
அற்புதத்தை தொலைத்து விட்டு அன்பு நினைவுகளை
மட்டுமே சுமந்தபடி வாழுகின்றோம்
நீங்கள் மறைந்து இருபத்தைந்து ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் ஒளி முகத்தை
முன் நிறுத்தி என்றும் உங்கள்
மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்
நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
பிரிவால் துயருறும்
தாய், கணவன், பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள்,
மச்சான்மார், மச்சாள்மார், பேரப்பிள்ளைகள்..
தகவல்:
குடும்பத்தினர்