யாழ். இளவாலை காடிவளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் பேரம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித கண்டகி தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 30-10-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று பகல் 10.30 மணியளவிலும் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
காடிவளை,
இளவாலை.