

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சோமசுந்தரம் அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், சிவசம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தவமலர்(இலங்கை), காலஞ்சென்ற தவக்குமார், உதயகுமார்(லண்டன்), ஞானமலர்(இலங்கை), சிவமலர்(கனடா), நேசமலர்(இலங்கை), விஜகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தியாகலிங்கம், செல்வகலாசோதி(வினோ- லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார், சிறிகாந்தன்(கனடா), சண்முகராஜா சிந்துஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தாரணி சுகந்தன், துர்காஜினி நிதர்ஷன், சாய்ராஜ், சங்கீதா, சதீஷ், சிந்துஜா அருள்பிரகாசம், பிரசி, டெனீக்கா, தனராஜ், காருண்யா, பவிராஜ், கரிணி, சாம்பவி, வித்தகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சஸ்வின், அபிநாத் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தளம் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.