Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 20 APR 1943
ஆண்டவன் அடியில் 13 APR 2014
அமரர் அருணாசலம் முத்துத்தம்பி
வயது 70
அமரர் அருணாசலம் முத்துத்தம்பி 1943 - 2014 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் முத்துத்தம்பி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 22.03.2024

மாலை மாற்றி,
மாங்கல்யம்சூட்டி, திலகமிட்டு
மனைவியாக்கியவரே!

அப்பாவாகி எமக்கு உயிர் தந்தவர்.
எம்மை விட்டு உயிர் பிரிந்த நாள்.
பூவுலகில் புகழுடன் நீர்த்து ஆண்டுகள் 10ஆனதுவோ!!!!

தொப்பிள்க்கொடி உறவுக்கு முதல் நீர் வார்த்தவரே.
எங்கள் குடும்பத்திற்கு ஆணிவேராய்,
அத்திவாரமாயிருந்து எம்மைக்காத்தவரே.

குடும்பமெனும் பூமிக்கு ஒளி தந்த சூரியரே.
இல்லமெனும் கோவிலுக்கு இருள் நீக்கிய அகல் விளக்கே.
எங்களை தினந்தோறும் காவல் காத்த குல சாமியே.
சிறகிருந்தும் பறக்கத் தெரியாத எக்களுக்கு
எல்லையில்லா வானமும், வளமும் காட்டியவரே.

அன்பின் பிறப்பிடமே ஆனந்தத்தின் உறைவிடமே
இன்பத்தின் இருப்பிடமே ஈகையில் ஈடிணையில்லா
வள்ளலே உறவுகளுக்கு உண்மையானவர
 ஊரவர்களுக்கு உத்தமரே.

பரிசினில் எங்களோடு கூடி இன்பமாய்
வாழ்கையில் உங்களை கயவன்
காலனவன் ஏன் பறித்தானோ !!!

பாசம் நிறைந்த எங்கள் அப்பா அருகில்
வாழ்ந்த காலங்கள் சொப்பனமாய் போனாலும்
என்றும் எங்கள் மனங்களில் உங்கள் நினைவுகள் உயிர் வாழும்.

மண்ணை விட்டு நீங்கள்
விண் நோக்கி விரைந்தாலும்
கண் விட்டு மறையாமல்
காண்கின்றோம் தினம் தோறும்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

உங்கள் நீங்கா நினைவுகளுடன்
குடும்பத்தினர், மனைவி, மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.   

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices