

"இலையின் உதிர்வல்ல மலையின் சரிவு" விஜயபாலன் அண்ணா! இடிமேல் இடியாய் வந்ததோர் செய்தி, நீங்களும் இனி எம்மோடு இல்லையென.... எம் இதயம் ஒரு கணம் இயங்க மறுத்தது.... கொல்லுயிரியின் கொலைக்களத்தில்-உங்கள் உன்னத ஆவி அடங்கியதோ? உங்கள் பட்டுச்சிரிப்பெங்கே?பவள வாய் மொழி எங்கே?அள்ளிக்கொடுத்திடும்.... அன்பான கைகள் எங்கே?கண்ணிமைக்கும் நேரத்தில் காலன் பறித்தானே?மீசாலை வீரசிங்கம் கல்லூரியின் அபிவிருத்திக்கு, அயராது உழைத்துவிட்டு-மின்னாமல் முழங்காமல் மிகு பயணம் போனீர்-இன்று எம் மண்ணின் பெருவிருட்சம் பேச்சிழந்து கிடக்கிறதே.எமை தேற்றுவார் யாருமின்றி தேம்பி அழுகின்றோம். உம்சாதனைகள் எல்லாம் கண்முன்னே நிற்கிறது.எம் வேதனைப்பாடலை பாடிடும் இந்த சோகத்தைத் தந்துவிட்டு போனீர்களே!வீரசிங்கம் மத்திய கல்லூரியின் புலம்பெயர் மாடப்புறாக்களின் இராஜ கோபுரமே! உங்கள் நிழலில் தானே நாங்கள் இளைப்பாறினோம். எமை தவிக்க விட்டு இறைவனடி போனதென்ன? மண்ணின் மைந்தனே-விஜயபாலன் அண்ணனே! நீங்கள் மரணித்துப் போனாலும்,வாழ்வீர்கள் புகழோடு என்றென்றும் எம் நெஞ்சமதில்..... யா/வீரசிங்கம் மத்திய கல்லூரி மீசாலை பழையமாணவர்கள். இலண்டன் (றஞ்சன் ராஜ்)