

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், பதுளை இல. 223 லோவர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சொக்கலிங்கம் அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தெய்வானை(கருங்காலி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முகாந்திரம் வைத்திலிங்கம், அமுதவல்லி(ஆலடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவரூபன்(பதுளை), சிவதர்சினி(கனடா), சிவறஞ்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமலர்(பதுளை), நந்தகுமார்(Real Estate Broker at ZOLO Reality- கனடா), சிவசங்கர்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பதுஷன், தக்ஷன்(பதுளை) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
அபிஷன், அனக்ஷன், தீபிகா, சர்வினி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம், பொன்னம்பலம், கந்தசாமி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:30 மணியளவில் பதுளை பொதுத் தகனசாலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.