1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 18-10-2022
யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சிவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி பண்பு
என்னும் கதிர்களை பகலவன்
போல் பரப்பி இல்லறம் என்னும்
இன்பத்தை இமை போல் காத்து
நின்றவரே நீங்கள் பிரிந்து ஒரு
வருடம் ஓடிப்போனது இன்னமும்
நம்பவே முடியாமல் நாங்கள்
இங்கே தவிக்கின்றோம்.
உழைப்பை உரமாக்கி- பாசமாய்
பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே...
ஓராண்டு கடந்தும் உங்கள்
நினைவுகள் எமை தினமும்
வாட்டி வதைக்கின்றது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.