Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 DEC 1959
இறப்பு 29 OCT 2020
அமரர் ஆறுமுகம் சிவராசா (அப்பு)
சீரடி சாய் திருக்கோவில் ஸ்தாபகர் மற்றும் தொண்டர்- Thun, சுவிஸ்
வயது 60
அமரர் ஆறுமுகம் சிவராசா 1959 - 2020 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 64 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவராசா அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா(காமாட்சி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலா(தங்கம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுதர்சன் அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

தர்மபாலன், சிவகாமசுந்தரி, இரவீந்திரன், யோகம்மா, யோகராசா, அன்பழகன், வெற்றிச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

ராசுபா அவர்களின் அன்பு மாமனாரும்,

சண்முகநாதன், யோகநாதன்(சின்னமணி), காலஞ்சென்றவர்களான தேவதாஸ், வரதராஜன், பரமேஸ்வரன் மற்றும் மனோகரன்(கருணா), ஐங்கரமூர்த்தி(மூர்த்தி), செல்வரதி, அருட்ச்செல்வம், மஞ்சுளா, சண்முகலிங்கம், தயாஈஸ்வரி, அமுதா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலாதேவி, இந்திராணி, ரோசாறி, தர்மநிதி, யோகநிதி, தர்மரஞ்சனி, சுஜாதா ஆகியோரின் அன்பு சகலனும்,

ராசன் சாந்தா தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அன்பு உறவுகளுக்கும், நண்பரகளுக்கும் 02.11.2020 திங்கட்கிழமை அன்று பி.ப 13:00 மணிமுதல் பி.ப 15:00 மணிவரை நடைபெறவிருக்கும் தந்தையின் இறுதிக்கிரியை நிகழ்வில் குறிக்கப்பட் 50 நபர்கள்(உறவுகள்) மட்டுமே கலந்து கொள்ள முடியும். சுவிஸ் அரசின் விதிமுறைகளுக்கு இணங்க. தயவுகோரி இதற்கு ஒத்துளைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள விருபுபவர்கள் பி.ப 14:30 மணிக்கு மண்டபத்துக்கு வெளியில் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து இணைத்து கொள்ளுங்கள். 01-11-2020 ஞாயிற்றுகிழமை அன்று மட்டுமே அவரை பார்வையிட விரும்புபவர்கள் ந.ப 12:00 மணியிலிருந்து பி.ப 17:00 மணிவரை பார்வையிடலாம் என்பதை அறியத்தருகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்