யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் செல்லையா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் அன்புக் குடும்பத் தலைவர் அருளானந்தன் செல்லையா அவர்கள் கடந்த மாதம் 05.02.2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவரின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்திக்கான பிராத்தனையும் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 13:30 தொடக்கம் மாலை 16:30 மணிவரை நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்துகொள்வதோடு தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் இணைந்துகொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் அழைக்கின்றோம்.
இடம்:
South Chingford Congregational Church
161 Chingford Mount Road,
London,
E4 8LT