யாழ். பலாலியை பிறப்பிடமாகவும், விசுவமடு புன்னைநீராவியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி சின்னாச்சிப்பிள்ளை அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று தனது 106வது வயதில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும், திரு. திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற அப்புக்குட்டி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் சரஸ்வதி, இராசேஸ்வரி, நாகுலேஸ்வரி, சந்திரலேகா, குணரத்தினம், மஹாலட்சுமி, விஷாகலட்சுமி, தானலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
67 பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,
கொப்பாட்டப்பிள்ளைகளின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விசுவமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.