Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1939
இறப்பு 13 NOV 2019
அமரர் அப்பாக்குட்டி கந்தையா செல்வவிநாயகம்
முன்னாள் கரைச்சி தெற்கு ப. நோ. கூ சங்கக் கிளை முகாமையாளர், இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலய முன்னாள் தலைவர், தேர் திருப்பணிச்சபை செயலாளர், தர்மகர்த்தா
வயது 79
அமரர் அப்பாக்குட்டி கந்தையா செல்வவிநாயகம் 1939 - 2019 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி மேற்கு கஞ்சாம்பாதியைப் பிறப்பிடமாவும், கிளிநொச்சி 48/3 திருவையாறு, யாழ். கரவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி கந்தையா செல்வவிநாயகம் அவர்கள் 13-11-2019 புதன்கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமி தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற வீரகத்தி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி(பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,

கனகாம்பிகை(அம்பி- கனடா), அம்பிகைபாகன்(செல்வன்- நெதர்லாந்து), கேதீஸ்வரன்(வரன்- கிளிநொச்சி), மோகனாம்பிகை(மோகனா- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருளானந்தம், லிங்கலதா, செல்வரஞ்சினி, தயாளன், சுகுமாரன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பரமு, சிவராசா, விக்னேஸ்வரன் மற்றும் லோகேஸ்வரி சந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

விமலராணி, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

துளசி, தனுஷ், அஸ்மிதா, சிந்தூரி, கேதாரகன், பபித்தா, கனிஷ்கவினோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்