யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நவ்வியை வசிப்பிடமாகவும், கோவில்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் ஜோசப் அவர்கள் 06-07-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அதிரியாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோசப் றீற்றா ஞானரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
யஸ்மின்(Bahrain), யூட் (சுவிஸ்), Cllr ஜொய்சி(லண்டன்), யூடி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பால்ராஜ், ரமணி, பிலிப், சுகத் சந்திரசேன ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கவி, அமித், யற்சிகன், யரோன், யனிஷா, அன்ரியா, தருஷ, தருங்க ஆகியோரின் அன்புப் பேரனும்,
திரேசா, ராணி, புஸ்பம், சாந்தா, அமலா, இராசநாயகம், குணம், நாதன், ரஞ்சி, ரஞ்சன், இராஜி ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, மிக்கேல், ஞானராஜா மற்றும் பீற்றர், யோகராசா, அலோசியஸ், விக்ற்றர், ராசா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-07-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 09:30 மணிவரை நவ்வியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 03:00 மணியளவில் இளவாலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு, அதனைதொடர்ந்து இளவாலை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details