யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அரியாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரனி புஸ்பவதி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறு ஆண்டைக் கடந்தாலும்
ஆண்டுகள் பற்பல பறந்தாலும்
உங்கள் நினைவுகள் மறையாது
எங்கள் மனத்திரையில் உங்கள்
நினைவுகள் வந்து வந்து மீட்டிச் செல்கிறது
அன்று போல் இன்றும் எம்மோடு
இருப்பது போல் மனதை வருடி செல்கிறது
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உன் நினைவுகள்
என்றும் என் மனதை விட்டு கலையாது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
Deepest Condolences for the loss of an Angelic Lady.