
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா வஸ்தியாம்பிள்ளை அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞசென்ற மரியாம்பிள்ளை மார்சலா தம்பதிகளின் அன்பு மகளும், மனுவேற்பி்ளளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மரியம்மா செபஸ்தியாம்பிள்ளை, சிசிலியா பிரான்சிஸ், விக்ரோறியா, அருட்பணி பாவிலுப்பிள்ளை அடிகளார், இன்னாசித்தம்பி, ஆரோக்கியநாதர், யோசவ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பயஸ்பிள்ளை, ஜேற்றூட், அந்தோனிமுத்து, மேரிகிளாறா, மரியாம்பிள்ளை, இமெல்டா, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெறோம், ஜோய், பற்றிமா ஆகியோரின் வளர்ப்புத் தாயாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-03-2021 திங்கட்கிழமை அன்று A.F றேமன்ட்ஸ் மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 3.30 மணியளவில் கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.