1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அம்பிகைபாகன் கந்தசாமி
வயது 64
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி:02-02-2026
மாத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, ஜேர்மனி Bruchsal, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்து
வழிகாட்டும் துணை நீதான் ஐயா!
ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்து
இனி எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா?
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதமாகி
மாதங்கள் ஆண்டாகி போனாலும்
ஆறவில்லை எங்கள் துயர்
உறுதியின் உறைவிடமாய் - எங்கள்
உள்ளத்தில் வீற்றிருக்கும்
எந்தையே, அன்புத் தந்தையே!
சத்தம் எதுவுமே இல்லாது
மீளாத்துயில் கொண்டது ஏனோ!
எமக்கு அக்கணமே சோகமும், துயரும்
வந்து சேர்ந்தது! செய்வது அறியாது
கலங்கிய விழிகளுடன் கனத்த மனதுடன்
உங்களின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்