


திரு. தம்பிப்பிள்ளை அம்பலம் அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவாக ஆசிரியர் சிவநாயகமூர்த்தி சுப்பிரமணியம் எழுதிய "நெடுந்தீவு மக்களும் வரலாறும் " என்ற நூலில் இருந்து:- திரு. தம்பிப்பிள்ளை அம்பலம் அவர்கள் 1927 - 2015 கிராமசபைத் தலைவர் 1968-1974 சமாதான நீதவான் 1927 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1968ல் கிராமசபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவரே நெடுந்தீவு கிராமசபைத் தலைவர்களாக இது வரையிருந்தவர்களில் வயதில் குறைந்தவர் ஆவார் . தனது ஆரம்ப கல்வியை நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் உயர்தர கல்வியை ஊர்காவற்துறை சென் அன்ரனிஸ் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி தெட்டிலிருந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து நான்கு வரை கிராம சபை தலைவராக பணியாற்றினார். இவர் ஆரம்ப காலங்களில் தமிழ்க்காங்கிரஸ் பிரமுகராகச் செயல்பட்டார். இவருடைய காலத்தில் பல பொதுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நெடுந்தீவில் உள்ள கூட்டுறவாளர்களை ஒன்றிணைத்து நெடுந்தீவிற்கென தனியான பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பித்து அதன் முதலாவது தலைவராக 1979 ஆம் ஆண்டு பணி புரிந்து மீண்டும் 1989ம் ஆண்டு கூட்டுறவு சங்க தலைவராக தெரிவு மீண்டும் செய்யப்பட்டார். விசேடமாக இவரின் காலத்திலேயே குழாய் நீர் விநியோகத்திட்டம் நெடுந்தீவில் செயல்படுத்தப்பட்டதென்பதும், மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, இவர் இப்பணியில் தீவிரமாகச் செயற்பட்டாரென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நெடுந்தீவு மக்களுக்கான எரிபொருள் விநியோகத்திலும் இவரின் சேவைநெடுந்தீவு மக்களால் மறக்க முடியாததும் பாராட்டக்கூடியதாகும். அமரர் கலாநிதி சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி எழுதிய நெடுந்தீவு மக்களும் வரலாறும் ( Delft People & History) என்ற நூலில் இருந்து:- neduntheevu.com