10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கல்லுவத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அழகதுரை ஆறுமுகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்றும் எங்கள் உயிரோடு கலந்திருக்கும்
எங்கள் அன்புத் தெய்வத்திற்கு கண்ணிரால்
எழுதி சமர்பிக்கின்றோம்
அதிகாலை சூரியனாய் ஒளிவீசி
இருந்த நீங்கள்
அர்த்தம் ஏதும் சொல்லாமல்
அஸ்தமித்த ஏனப்பா???
அன்புக்கு அர்த்தம் சொல்லி
சிரிப்புக்கு கதைகள் சொல்லி
சிறப்பாக இருந்த உங்களை
சீண்டினான் காலன் ஏனோ???
கடந்துவிட்ட வருடங்களில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதையா
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
ஜெயபாலசிங்கம் குடும்பம்(மகன்- கனடா)
தொடர்புகளுக்கு
ஜெயபாலசிங்கம் - மகன்
- Contact Request Details