Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 17 JUL 1943
விண்ணில் 14 AUG 2021
அமரர் கந்தையா மகேந்திரன்
வயது 78
அமரர் கந்தையா மகேந்திரன் 1943 - 2021 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவில் தெற்கு துரை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகேந்திரன் அவர்கள் 14-08-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, யோகம்மா, ஆனந்தகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜேந்தினி(ஆசிரியை- வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம்), ஜெயகாந்தன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், வேலணை), Dr. ஜெயந்தினி(யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலதாசன்(ஆசிரியர் - யா/ கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), பிரவீனா(ஆசிரியை- யா/ உடுவில் முருகமூர்த்தி வித்தியாசாலை), பேராசிரியர் வேலாயுதமூர்த்தி(இரசாயனவியல் துறை- யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பத்மாவதி, குமாரசாமி, இரத்தினசிங்கம், காலஞ்சென்றவர்களான அன்னம்மா, குமாரகுலசிங்கம், சுகிர்தாம்பிகை மற்றும் சந்திரவதனி, சகுந்தலாதேவி, சோதிநாதன், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிஷாலினி, ஆர்த்திகன், நாராயணி, பானுஜன், கேசிகா, சிவகாமி, உமையாள் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
துரை வீதி,
தாவடி வடக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயகாந்தன் - மகன்